இடைக்கால தமிழ்ச் சமூகத்தில் தேவதாசிகள்: சிற்றிலக்கியங்களின் வழியாக ஒரு மதிப்பாய்வு

Devadasis in Medieval Tamil Society: A Study through Minor Literary Texts

Authors

  • Jeevanandam Jawaharlal Nehru University

Keywords:

தேவதாசி, சிற்றிலக்கியங்கள், Devadasi, Chitrilakkiyam

Abstract

ஆய்வுச் சுருக்கம்
இந்த ஆய்வுக் கட்டுரை, இடைக்கால தமிழ்ச் சமூகத்தில் கோவில் தொடர்புடைய தேவதாசிகள் வகித்த இருமுகப் பாத்திரத்தையும், அவர்கள் எதிர்கொண்ட முரண்பாடுகளையும் சிற்றிலக்கியங்களின் வழியாக ஆய்வு செய்கிறது. ஆரம்பகால கல்வெட்டுகள், தேவதாசிகள் கோவில் வாழ்வில் அங்கீகரிக்கப்பட்டும் மங்களகரமானவர்களாகக் கருதப்பட்டும் இருந்த நிலையைச் சுட்டுகின்றன. எனினும், பிற்கால கல்வெட்டுகள் அவர்கள் ஒழுக்கச் சிதைவு மற்றும் கோவில் அதிகாரிகளால் சுரண்டப்படுதல் பற்றிய குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துகின்றன. இந்த மாற்றத்தை, ‘தனிப்பாடல் திரட்டு’ மற்றும் ‘விறலிவிடு தூது’ போன்ற சிற்றிலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. அருணகிரிநாதர், காளமேகம் போன்ற கவிஞர்களின் படைப்புகளிலும், பல ‘விறலிவிடு தூது’ காப்பியங்களிலும் (தெய்வச்சிலையார், மூவரையன், சேதுபதி, நண்ணாவூர், கூளப்பநாயக்கன்), தேவதாசிகளின் அழகு-கலை திறன் பாராட்டப்படுவதும், மறுபுறம் அவர்கள் பாலியல் சுரண்டல், பொருளாதார சிதைவு மற்றும் சமூக விமர்சனங்களுக்கு உள்ளாவதும் சித்தரிக்கப்படுகின்றன. இந்த ஆய்வு, இலக்கிய ஆதாரங்களின் இணைந்த பார்வை வழியாக, இடைக்காலத் தமிழ்ச் சமூகத்தின் ஆணாதிக்க, மத மற்றும் பொருளாதார அமைப்புகளுக்கு இடையே தேவதாசிகள் எப்படி சிக்கிக் கொண்டார்கள் என்பதையும், அவர்களின் ‘புனித’ நிலை காலப்போக்கில் எவ்வாறு சீரழிவுக்கு உள்ளானது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

Abstract
This research article examines the dual role played by devadasis in medieval Tamil society and the contradictions they encountered, as reflected in chitrilakkiyam (minor literary genres). Early inscriptions indicate that devadasis were recognized within temple life and regarded as auspicious figures. However, later inscriptions reveal allegations of moral decline and their exploitation by temple authorities. This transformation is emphasized in minor literary works such as Thanipadal Thirattu and Viralividu Thoothu. In the writings of poets like Arunagirinathar and Kalamegam, as well as in several Viralividu Thoothu compositions (Deivachilaiyar, Muvaraiyan, Sethupathi, Nannavur, and Koolappanayakkan), devadasis are portrayed on the one hand as admired for their beauty and artistic skills, and on the other as subjected to sexual exploitation, economic decline, and social criticism. Through a combined reading of these literary sources, this study highlights how devadasis became trapped between the patriarchal, religious, and economic structures of medieval Tamil society, and how their “sacred” status gradually deteriorated over time.

Downloads

Download data is not yet available.

References

Pudukkottai State Inscription (P.S.I.) .

Annual Report of Indian Epigraphy (A.R.I.E.).

Sadasivan, K. Devadasi System in Medieval Tamilakam. Trivandrum: CBH Publications, 1993.

தனிப்பாடல் திரட்டு.

மிதிலைப்பட்டிச் சிற்றம்பலக் கவிராயர் இயற்றிய மூவரையன் விறலி விடுதூது. சென்னை: உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், 1982.

சரவணப்பெருமாள் கவிராயர். சேதுபதி விறலிவிடு தூது. காரைக்குடி: இலக்கியப் பதிப்பகம், 1947.

சுப்ர தீபக் கவி. கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது. காரைக்குடி: ராய. சொக்கலிங்கன்.

Published

30-06-2026

How to Cite

Jeevanandam. (2026). இடைக்கால தமிழ்ச் சமூகத்தில் தேவதாசிகள்: சிற்றிலக்கியங்களின் வழியாக ஒரு மதிப்பாய்வு: Devadasis in Medieval Tamil Society: A Study through Minor Literary Texts. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 4(1), 78–84. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/123